~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடுக்கரை
தமிழ் நாட்டின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய அழகிய கிராமம் கடுக்கரை ஆகும் .சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு நடுவில் ஒரு சிறிய குன்றின் கீழ் அமைந்துள்ளது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் தம்பிரான் கோவில் ஊட்டுத் திருவிழா இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும் இவ்வூரின் முக்கிய தொழிலாக விவசாயமும் வைக்கோல் கட்டும் தொழிலும் உள்ளது நெல் வாழை உளுந்து தென்னை மரவள்ளிகிழங்கு ஆகியவை இங்கு பயிரிடப்படுகிறது இவ்வூரின் வடக்கு பகுதியில்( காட்டுப்புதூர்) அமைந்துள்ள நீர் வீழ்ச்சி உலக்கை அருவி ஆகும் இந்நீர் வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் மேலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிர்ச்சியையும் செய்வது போலவும் ஆகும்
ப.செல்லம்
மேலத்தெரு
கடுக்கரை